"நகர்ந்து கொண்டிருப்பதே நதி!-இயங்கிக் கொண்டிருப்பவனே இளைஞன்!"

Tuesday, May 27, 2008

தோழர் ஜீவா




1963 ஆம் ஆண்டு தமிழகத்தின்
காரல் மார்க்ஸ் என்று அழைக்கப்படும்
தோழர் ஜீவா அவர்கள்
"ஜனசக்தி" பத்திரிக்கை
அலுவலகத்தில் எழுத்துப்
பணியில் மும்முரமாக
ஈடுபட்டிருந்தார்.

அப்பொழுது இரு
இளம்பெண்கள் "ஜீவா"
இருக்கிறாரா என்று தயங்கி
தயங்கி கேட்டு ,
அனுமதிக்கபட்ட பிறகு
அவர்களிலிருவரும் ஜீவா
முன் சென்று அமர்ந்தனர்.

ஜீவா தன் இயல்பான
பரிவுக்குரலுடன், "
என்னம்மா வேண்டும்!" என்று
கேட்டார்.

"உங்களைத்தான் பார்க்க
வந்தோம் !" என்று ஒரு பெண்
கூறினாள்.

"நீ யாரம்மா ?"
என்று இருவரில்
பேசாமல் இருந்த பெண்ணைப்
பார்த்துக் கேட்டார்,ஜீவா.

அந்த பெண்ணும் பதில்
எதுவும் சொல்ல வில்லை.

ஏற்கனவே பேசிய அதே பெண்
திரும்பவும், "நாங்கள்
ஆசிரியப் பயிற்சி முடித்த
மாணவிகள்" என்றாள்.

மீண்டும் ஜீவா,பேசாமல்
தன்னையே பார்த்துக்
கொண்டிருந்த
இளம்பெண்ணைப் பார்த்து ,

மீண்டும்"நீ யாரம்மா?" என்று கேட்டார்.


அப்பெண்ணின் கண்கள்
கலங்கின.ஒரு துண்டுக்
காகிதத்தை அப்பெண்
ஜீவாவிடம் நீட்டினாள்,
அதில்

"எனது தாத்தாவின் பெயர்
குலசேகரதாஸ். எனது
அன்னையின் பெயர் கண்ணம்மா.
உங்கள் மகள் நான்" என்று
எழுதியிருந்தது.

அந்த வாக்கியங்களை
வாசித்து திகைத்துப் போன
ஜீவா அதே துண்டுக்
காகிதத்தின் இறுதியில்
"என் மகள்" என்று எழுதி அந்த
இளம் பெண்ணிடம்
நீட்டினார்,ஜீவா.

அந்த வார்த்தைகளை கண்
கொட்டாமல் பார்த்துக்
கொண்டே இருந்தாள்,அந்த
இளம் பெண்.

எழுதிய
துண்டுக்காகிதத்தை ஜீவா
திரும்பக் கேட்டார்.
அப்பெண் அதைக் கொடுக்க
வில்லை!

"என் மகள் என்று
சொல்வதற்குக்
கூச்சப்பட்டுத்தானே
தலையைச் சுற்றி மூக்கைத்
தொடுகிறாய் ",என்று ஜீவா
மனம் திறந்து கேட்டே
விட்டார்.

அப்பெண் சிரிப்பினால்
பதில் சொன்னாள் .

பிறந்தது முதல் பதினேழு
ஆண்டுக்காலம் தந்தை
ஜீவாவைக் கண்டிராமல்,
இப்பொழுது துண்டுக்
காகிதம் கொடுத்து
அறிமுகம் செய்து கொண்ட
அந்த பெண்ணின் பெயர்
குமுதா!

தோழர் ஜீவா
Share/Save/Bookmark

No comments:

Post a Comment

வணக்கம்!

"நகர்ந்து கொண்டிருப்பதே நதி!-இயங்கிக் கொண்டிருப்பவனே இளைஞன்!


பதிவுக்கான மறுமொழிப் பெட்டி

நன்றி..!

♥ ஆதிசிவம்@சென்னை ♥

www.beyouths.blogspot.com

மின்னஞ்சல் வழியே உடனடியாகச் சூடாகப் புதியப் பதிவுகளைப் பெற...

Enter your email address:

Delivered by FeedBurner

Labels

Blog Archive

Search This Blog

Followers

About Me

My photo
e m@il: (loveable@poetic.com) (foryouths@beyouths.com) (mobile 9941463500)

உங்கள் கருத்துக்களை இங்கே தெரிவிக்கவும்

Guestbook

என் வலைப் பூக்கள்...!

"நான் எப்போதும் மழையில் நடக்க விரும்புகிறேன். அப்போதுதான் நான் அழுவதை யாரும் பார்க்க முடியாது" -சார்லி சாப்ளின்


 என் வலைத்தளத்தில்
 www.nee-naan-nilaa.blogspot.com
  
நான் எழுதிய சார்லி சாப்ளின் கதையை
இந்த முகவரியில் இணைத்திருக்கிறது..!

கீற்று இணைய தளத்திற்கு...

நன்றி!
Clicky Web Analytics